Home இலங்கை கிளிநொச்சியில் பல ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை வெட்டுவதற்கு முயற்சி :

கிளிநொச்சியில் பல ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை வெட்டுவதற்கு முயற்சி :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சி பழைய வைத்தியசாலை வளாகத்திலுள்ள பல்லாண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்றினை வெட்டி அழிப்பதற்கு பிராந்திய சுகாதார திணைக்களத்தினரால் நடவடிக்கை எடுக்கப்படுவவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பழைய வைத்தியசாலையின் மகப்பேற்றுவிடுதிக்கு (தற்போது செயற்கை அவய உற்பத்தி நிலையம் மற்றும் காகிதாதிகள் களஞ்சியம் ஆகியன தற்காலிகமாக இயங்கும் கட்டடங்களுக்கு) அருகாமையில் காணப்படும் ஆலமரத்திற்கே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேற்படி கட்டிடங்களுக்கு அபாயம் நேரிடலாம் என்ற கோதாவில் மிகவும் தந்திரமான முறையில் இந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.  2009 க்கு முன் குறித்த ஆலமரத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் மரத்தை மையமாக வைத்தே அமைக்கப்பட்டது. இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு அரசும் அரசார்பற்ற தன்னார்வ நிறுவனங்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சுகாதார திணைக்களத்தின் இந் நடவடிக்கையானது சூழலியலாளர்கள் மத்தியில் கவலையினையும், விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது

பல்லாண்டுகள் நிலைத்து நின்று நிழல் வழங்கும் பல்லுயிர்களின் வாழ்விடமாக சூழலியல் அச்சாணி எனப் போற்றப்படும் ஆலமரமானது பல நாடுகளில் பாதுகாக்கப்படும் ஒரு மரமாகும்.  அந்தவகையில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இந்தப் பழமையான ஆலமரத்தினைப் பாதுகாக்க உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கவேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அண்மையில் பல வருடங்கள் ஆன இரண்டு வேப்பமரங்கள் கிளிநொச்சி சுகாதாரத் திணைக்கள வளாகத்தில் மரக்கூட்டுத்தாபனத்தினரால் வெட்டி அகற்றப்பட்டிருந்தமை பல தரப்பினரிடையே விசனத்தை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More