Home இலங்கை நீதி மன்றின் உத்தரவுக்கு அமைய அமைச்சு பதவியை ஏற்ற பின் இராஜினாமாச் செய்வேன்?

நீதி மன்றின் உத்தரவுக்கு அமைய அமைச்சு பதவியை ஏற்ற பின் இராஜினாமாச் செய்வேன்?

by admin

“நீதி மன்றின் உத்தரவுக்கு அமைய மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வேன். இல்லை எனில் அது நீதி மன்றை அவமதிப்பதாக அமைந்துவிடும். எனவே அதனடிப்படையில் அமைச்சு பதவியை பெற்ற பின்னர் அதனை இராஜினாமாச் செய்யவும் ஆலோசித்து வருகிறேன்.”

வடக்கு மாகாண மீன் பிடி போக்குவரத்து முன்னாள் அமைச்சர் ​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதோடு அமைச்சு பொறுப்பை மீண்டும் வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனுடன் தொடர்பு கொண்டு உங்களுடைய அடுத்த கட்ட நகர்வு என்ன வினவிய போதே அவர் இவ்வா தெரிவித்துள்ளார்.

“எனது இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம் இரண்டு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று எனது விடயத்தில் முதலமைச்சரின் தீர்மானம் தவறு என்பது இரண்டாவது பதின்மூன்றாவது அரசியலமைப்பின் படி மாகாண சபைகளுக்கு போதிய அதிகாரங்கள் இல்லை என்பதும். எனவு இதுவொரு வரலாற்று தீர்ப்பாகவே கருதுகிறேன்.”

அத்தோடு வரும் திங்கள்(02) கிழமை நீதி மன்றின் இடைக்கால உத்தரவு வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படும் அதன் பின்னர் அவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More