Home சினிமா 22 வருடங்களின் பின்னர் இணையும் மோகன்லால் – பிரபு

22 வருடங்களின் பின்னர் இணையும் மோகன்லால் – பிரபு

by admin

நடிகர்கள் மோகன்லாலும் பிரபுவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1996-ம் ஆண்டு வெளியான சிறைச்சாலை படத்தில் மோகன்லால், பிரபு, தபு, அம்ரிஷ் புரி, வினீத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்துக்குப் பின்னர் மோகன்லாலும் பிரபுவும் இணைந்து நடிக்கவில்லை என்கின்றநிலையில், 22 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இஇணைந்து நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தினையும் சிறைச்சாலை படத்தினை இயக்கிய பிரியதர்ஷனே இயக்கப் போகிறார்.

பிரியதர்ஷனின் கனவுப்படமான ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்னும் படத்தில் தான் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். . 16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். குஞ்சலி மரக்கார் பிரிட்டிஷ்காரர்களைத் தீவிரமாக எதிர்த்தவர் ஆவர்

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில், தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகளை நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More