Home இந்தியா சேலத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு

சேலத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு

by admin


சேலத்தில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் 24 மணி நேரத்திற்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இந்தநிலையில் சகோதரருடன் வந்துகொண்டிருந்த 16 வயதான மாணவனான முகமது ஆசாத் என்பவர் அங்குள்ள கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்துள்ளார். சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் காப்பாற்ற முயன்ற போதும் அதிக அளவில் தண்ணீர் சென்றதால் அவரை மீட்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டநிலையில், 24 மணி நேரத்திற்குப் பிறகு இன்று காலை கருவாட்டுப் பாலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More