Home உலகம் இணைப்பு 2 -இந்தோனேசிய படகு விபத்து – உயிரிழந்தோர் 31 ஆக அதிகரிப்பு

இணைப்பு 2 -இந்தோனேசிய படகு விபத்து – உயிரிழந்தோர் 31 ஆக அதிகரிப்பு

by admin

இந்தோனேசியாவில் நேற்று நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும்  படகில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களில் பலர்   படகில் இருந்து வெளியேறி உயிர் தப்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தோனேசியாவில் மற்றொரு படகு விபத்து – 12 பேர் பலி :

Jul 3, 2018 @ 20:21

இந்தோனேசியாவில் இன்று இடம்பெற்ற மற்றொரு படகு விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுலாவேஸி தீவு பகுதியில் இன்று காலை இந்தப் படகு விபத்து ஏற்பட்டதாகவும் படகில் 139 பேர் படகில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 163 பேர் காணாமல் போயிருந்த நிலையில் சிலரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில் இன்று இந்தப் படகு விபத்து ஏற்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பயணிகளை ஏற்றுவதே விபத்துக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More