Home இலங்கை இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு ரூபா 800 மில்லியனை வழங்க ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் இணக்கம்

இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு ரூபா 800 மில்லியனை வழங்க ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் இணக்கம்

by admin

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மிகப்பெரிய தொகையை நிலுவையாக செலுத்த வேண்டியிருந்த நிலையில் அதனை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எயர்லைன்ஸ் நிறுவனத்துடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது.

இந்நிலையில் சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் ரூபா 800 மில்லியனை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. நீல் ஜயசேகர அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் அரச தொழில் முயற்ச்சி அமைச்சின் செயலாளர் ரன்ஜித் ஹேவாவிதாரன, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக்க ரணதுங்க மற்றும் சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ராஜித பெனன்டோ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்த பேச்சுவார்த்தை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ரூபா 13.45 பில்லியன் கடன் நிலுவையில் முதற்கட்டமாக ரூபா 800 மில்லியனை வழங்க தீர்மானித்துள்ளது. மீகுதிப் பணத் தொகையை செலுத்துவதற்கு, அமைச்சரவையின் அனுமதியைபெற்று தனியார் வங்கியில் கடன்பெறமுயற்சிக்கவுள்ளது. இதனையடுத்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது
000

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More