Home இலங்கை ​கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம்.

​கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம்.

by admin

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 33வது வருடாந்தப் பொதுக்கூட்டம் இன்று புதன்கிழமை பாசிக்குடாவில் அமைந்துள்ள எலிபன்ட் றொக் றிஸோட்டில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் இரா. இராஜசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசியர். T. ஜெயசிங்கம், பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி. K.E. கருணாகரன், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி. S. ஜெயசங்கர் மற்றும் கலை கலாசார பீட பீடாதிபதி M. ரவி, பதில் பதிவாளர் A. பகிரதன், நிதியாளர் M.M.M. பாரிஸ், தாபனங்கள் பிரிவின் (கல்விசாரா) சிரேஷ்ட உதவிப் பதிவாளர் V. நவிரதன், அத்துடன் சிரேஷ்ட உதவிப் பதிவாளர், சிரேஷ்ட உள்ளக கணக்காய்வாளர், மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர், செயலாளர் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகம், திருகோணமலை வளாகம் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தைச் சேர்ந்த சுமார் 450 கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களைப் பாராட்டும் நிகழ்வும் நடைபெற்றது. ஏ. ஜெகராஜு – தலைவர், உபதலைவராக – இரா. இராஜசேகரம், த. ஸ்ரீதரன் – செயலாளர், உப-செயலாளராக – மா.அமிர்தலிங்கம், ச.ரவீந்ரகுமார் – பொருலாளர் என்ற அடிப்படையில் ஊழியர் சங்கத்தின் 2018/2019 வருடத்திற்கான நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டதுடன் பீடங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கான பிரிதிநிதிகளும் அத்துடன் கிழக்கொளி சஞ்சிகைக் குழு, கலை கலாசாரக் குழு, விளையாட்டுக் குழு போன்ற உப-குழுக்களுக்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More