Home உலகம் சமூக ஆர்வலரின் மனைவியை வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு சீனாவிடம் ஐ.நா கோரிக்கை

சமூக ஆர்வலரின் மனைவியை வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு சீனாவிடம் ஐ.நா கோரிக்கை

by admin


நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலரின் மனைவியை வீட்டுச் சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்யுமாறு சீன அரசாங்கத்திடம் ஐ.நா. மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு சீனாவில் ஜனநாயகம் தொடர்பான சார்ட்டெர் 8 என்ற நூலை வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான 61 வயதான லியு சியாபோ என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது. லியு சியாபோவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் ஈரல் புற்றுநோயால் லியு சியாபோ பாதிக்கப்பட்டதனையடுத்து சிகிச்சை வழங்கும் நோக்குடன் அவர் விடுவிக்கப்பட்ட போதும் வெளிநாட்டில் இருந்து சிறப்பு நிபுணர்களை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சீன அரசு நிராகரித்து விட்டநிலையலி அவர் 2017 ஆம் ஆண்pடு உயிரிழந்து விட்டார்.

அவரது மரணத்துக்கு பின்னர் அவரின் மனைவி லியு கிசியா-வை சீன அரசு வீட்டுக் காவலில் வைத்திருப்பதாகவும் அவரது கைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுவதாகவும், சந்திக்க விரும்பும் நபர்களை காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தனிமையான இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் மன அழுத்தத்துடன் சேர்த்து உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ள லியு கிசியாவை வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெறும் வகையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் அதிகாரிகள் சீன அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More