Home இலங்கை பதுளை பாடசாலை, சுற்றுலாக் குழுவின் படகு எக்கல் ஓயாவில் கவிழ்ந்தது நால்வரை காணவில்லை..

பதுளை பாடசாலை, சுற்றுலாக் குழுவின் படகு எக்கல் ஓயாவில் கவிழ்ந்தது நால்வரை காணவில்லை..

by admin


அம்பாறை, தமண, எக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

பதுள்ளை, கந்தன சிறிசீவலி வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் குழு ஒன்று தமண பகுதிக்கு சுற்றலா சென்றிருந்த போது அதில் 9 பேர் படகு ஒன்றின் மூலம் எக்கல் ஓயாவில் பயணித்துள்ளனர்.

இதன்போது அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்தததை அடுத்து அருகில் இருந்த ஏனைய மீனவர்கள் ஐவரைக் காப்பாற்றியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலையின் அதிபர், ஆசிரியர் ஒருவர், அந்த பாடசலையின் காவளாலி மற்றும் 13 வயதுடைய மாணவன் ஒருவனுமே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் காவற்தறை மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More