Home இந்தியா அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை :

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை :

by admin


அமெரிக்காவில் கல்விபயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் விடுதியொன்றில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான சரத் கோபு என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியில் கல்வி படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்ககிச்சூட்டுக்கு இலக்கான மாணவர் காவல்துறையினரால் மீட்கபட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. . இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற காவல்துறையினர் தகவல் கொடுப்பவர்கள் 10,000 அமெரிக்க டொலர் பரிசுத்தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More