Home இலங்கை மக்களை திசை திருப்பவே விஜயகலாவின் பேச்சு – அவரை தண்டிக்க அரசியலமைப்பில் இடமில்லை…..

மக்களை திசை திருப்பவே விஜயகலாவின் பேச்சு – அவரை தண்டிக்க அரசியலமைப்பில் இடமில்லை…..

by admin


இலங்கை அரசியலமைப்பிற்கமைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் விஜயகலாவின் கருத்து, பதவியேற்பின்போது வழங்கும் சத்தியப்பிரமாணத்திற்கு எதிரானது என்பதால் அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாகாண சபை தேர்தல்களை விரைந்து நடத்தாவிட்டால் நாட்டில் சட்டம், நீதி மற்றும் ஒழுங்கு என்பன முழுமையாக செயலிழக்கும் நிலைமை உருவாகும் என குறிப்பிட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் மக்களை திசை திருப்பும் நோக்கிலேயே விஜயகலா மகேஸ்வரனின் புலிகள் தொடர்பாக கருத்து வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்பிருந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சியில் சிறந்த முன்னேற்றங்கள் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினர். ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டின் நிலை மிக மோசமாகியுள்ளது. அத்துடன் சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய காலப்பகுதி கடந்த செப்டெம்பர் மாதத்துடன் காலாவதியடைந்துள்ளது. எனினும் தற்போதுவரை தேர்தலை நடத்துவதற்குரிய எவ்வித நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படவில்லை.

தற்போது மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டு அவை வினைதிறனாக செயற்படும்போதே முழு நாடும் சீராக இயங்க முடியும். இங்கு மாகாண சபைகள் முறையாக நிர்ணயிக்கப்படாமல் இருப்பதனாலேயே நாட்டின் அரச சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்தாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More