Home இலங்கை வடக்கு மீனவர்களுக்கு கடற்தொழில் பயற்சிகள் சமுத்திரவியல் பல்கலைகழகத்தில் ஆரம்பம்…

வடக்கு மீனவர்களுக்கு கடற்தொழில் பயற்சிகள் சமுத்திரவியல் பல்கலைகழகத்தில் ஆரம்பம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

வடக்கு மீனவர்களுக்கு கடற்தொழில் பயற்சிகள் சமுத்திரவியல் பல்கலைகழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக ஊர்காவற்துறை கடற்தொழில் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கு மீனவர்கள் தொழினுட்பம் மற்றும் தொழில் ரீதியான பயிற்சிகள் இன்றி தொழில் செய்கின்றார்கள். அவர்களை தொழில் ரீதியாக முன்னேற்ற பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

சமுத்திரவியல் பல்கலை கழகத்தில் குறுகிய கால பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கடலட்டை பிடித்தல், ஆழ்கடல் சுழி ஓடல், ஜீபிஎஸ் பாவனை உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெறுகின்ற. அந்த பயிற்சி நெறிகளில் வடக்கு மீனவர்கள் இணைந்து கொண்டு தமது தொழில் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More