Home இலங்கை இலங்கையின் 30க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல்கார்கள், இத்தாலியின் 3 முக்கிய நகரங்களில்…

இலங்கையின் 30க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல்கார்கள், இத்தாலியின் 3 முக்கிய நகரங்களில்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

இலங்கையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல்கார்கள் இத்தாலியின் மூன்று முக்கிய நகரங்களில் இருப்பதுடன் அவர்கள் அங்கிருந்து இலங்கையில் உள்ள போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இத்தாலியின் மிலானோ, நாபோலி, வெரோனா ஆகிய நகரங்களில் இலங்கையை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர்கள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இத்தாலியில் பெருமளவில் விற்பனையாகும் லத்தீன் அமெரிக்காவின் சிட்டி அட்டை மூலம் இவர்கள், இலங்கையில் உள்ள தமது சகாக்களை தொடர்புக்கொள்கின்றனர்.

அதேவேளை சுவிஸர்லாந்தில் இருந்த இலங்கையை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர்கள், சுவிஸ் பொலிஸாரின் கண்காணிப்பை அடுத்து, இத்தாலிக்கு சென்றுள்ளதாக கூறப்படகிறது.

சுவிஸர்லாந்து எல்லையில் பாதுகாப்பு வேலிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால், இவர்கள் இலகுவாக இத்தாலி சென்றுள்ளனர். இத்தாலிக்கு சென்ற இவர்கள் இலங்கையின் களுத்துறை மற்றும் களுவாமோதர பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More