Home இலங்கை விக்கியிடம் தகவல் பெற வேண்டிய அவசியம் இராணுவத்தினருக்கு இல்லை…

விக்கியிடம் தகவல் பெற வேண்டிய அவசியம் இராணுவத்தினருக்கு இல்லை…

by admin


நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரம் உரிய முறையில் செயற்படுத்தப்படும். அதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தகவல் பெற வேண்டிய அவசியம் இராணுவத்தினருக்கு இல்லை என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

குறிப்பாக வடமாகாண அரச அதிகாரிகள் இராணுவத்தினருக்கு எவ்விதமான தகவல்களையும் வழங்கக் கூடாது எனவும், அவ்வாறு தகவல் வழங்க வேண்டிய அவசியம் ஏற்படுமாயின் தன்னிடம் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடுபவர்கள் கூறுகின்ற இவ்வாறான கருத்துக்களை படையினர் கவனத்திற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அத்தோடு அவர்களிடம் தகவல்களை பெற வேண்டிய அவசியம் எதுவும் இராணுவத்தினருக்கு கிடையாது. அதனால் விக்கியின் கருத்திற்கு, அரசாங்கமே உரிய பதிலை வழங்க வேண்டும் எனவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More