Home இலங்கை “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.”

“குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.”

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடாத்தப்படும் அது இராணுவ தளபதிகளாக இருந்தாலும் சரி, பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களாக இருந்தாலும் சரி. அதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினர் நேற்று சனிக்கிழமை காலை யாழ்.வீரசிங்க ம் மண்டபத்தில் விசேட அமர்வு ஒன்றை நடத்தியிருந்தனர்.

அந்த அமர்வின் நிறைவில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸிடம் ஊடகவியலாளர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல்போனவர்கள் விடயத்தில் இராணுவ தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் விசாரிக்கப்படுவார்களா? என கேட்டபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறிப்பிடுகையில், குற்றஞ்சாட்டப் பட்டவர் எவராக இருந்தாலும் விசாரிக்கப்படுவார்கள். அந்த விசாரணைகளில் அழுத்தங்களுக்கு இடமளிக்கப்படாது. பாரபட்சங்கள் காட்டப்படாது. என கூறினார்.

இதனை தொடர்ந்து போரின் நிறைவுப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இருந்தமை தொடர்பாக கேட்டபோது ஜனாதிபதியாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரத்தை கொண்டிருந்தாலும், சுயாதீனமான விசாரணைகள் நடாத்தப்படும். அதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

மேலும் போர் காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் விடயத்தில் இராணுவமாக இருந்தாலும் சரி, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளாக இருந்தாலும் சரி அவர்கள் மீதும் விசாரணைகள் நடாத்தப்படும் என்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More