Home இலங்கை கேப்பாபுலவு காணிகளை விடுவிப்பது சாத்தியமில்லை?

கேப்பாபுலவு காணிகளை விடுவிப்பது சாத்தியமில்லை?

by admin

முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த காணிகளை, இராணுவத்துக்கென சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதனை விடுவிப்பதற்கான சாதிதியங்கள் இஅல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ராணுவ முகாம் அமைந்துள்ள காணியின் ஒரு பகுதி பொதுமக்களுக்குச் சொந்தமாகக் காணப்படுகின்ற போதிலும், காணியை விடுவிப்பதற்கான சாத்தியமில்லையெனவும் குறித்த காணிகளின் உரிமையாளர்களில் சிலர், அவற்றை இராணுவத்துக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பல கோடி ரூபாய் செலவில், இராணுவ முகாம் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உடைத்துத் தள்ளிவிட்டு, வேறு இடங்களுக்கு இடம்பெயரும் போது, மேலும் பலகோடி ரூபாய்களைச் செலவிட நேர்வதால், இராணுவத்துக்குப் பாரிய நட்டம் ஏற்படும் எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, இராணுவ முகாமுக்கு முன்னால் கேப்பாபுலவு மக்களால் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம் 500 நாட்களைக் கடந்துள்ள நிலையில் ;த்துமீறித் தமது காணிகளுக்குள் நுழையவேண்டிய நிலைமை ஏற்படுமென, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடமத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More