Home இலங்கை சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்களின் பங்களிப்பில் இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரின் வீடு புனரமைத்து கையளிப்பு

சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்களின் பங்களிப்பில் இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரின் வீடு புனரமைத்து கையளிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில்.இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் குடும்பத்தினரின் வீட்டினை சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்கள் தமது நிதி பங்களிப்பில் புனரமைப்பு செய்து குடும்பத்தினரிடம் கையளித்து உள்ளனர். யாழ்.நல்லூர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் நீதிபதி இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர் உயிரிழந்து இருந்தார்.

அந்நிலையில் உயிரிழந்த மெய்பாதுகாவலரின் குடும்பத்தினருக்கு உதவும் நோக்குடன் , அவரது குடும்பத்தினருக்கு அவர்களது வீட்டினை இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் நீதிபதியின் நண்பர்களும், சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்களது நிதி பங்களிப்பில் புனரமைத்து கொடுத்துள்ளனர்.

அதேவேளை மெய்பாதுகாவலரின் பிள்ளைகளின் கல்வி செலவினை முழுமையாக தாம் ஏற்பதாக நீதிபதி தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More