Home இலங்கை முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் புலிகளின் பாரிய ஆயுத மீட்பு, முடிவுக்கு வந்தது!

முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் புலிகளின் பாரிய ஆயுத மீட்பு, முடிவுக்கு வந்தது!

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுதந்திரபுரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்கும் அகழ்வுப் பணி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்போது அபாயகரமான வெடிபொருட்கள் பல மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க முயற்சித்தபோதே அக் கிணற்றுக்குள் அபயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் வடக்கு கடற்படை உயர் அதிகாரி விக்ரம்சிங்க தலைமையில் அந்தப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் மற்றும் கடற்படையின் விசேட இராணுவ அணியினரும் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய பசீலன் 2000 ஆட்லறி செல் இரண்டு உள்ளிட்ட இராணுவ வெடிபொருட்கள் சில மீட்க்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அகழ்வு பணி முன்னர் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் கிணறு முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு ஆயுதங்கள் பல மீட்கப்படுள்ளன. குறித்த அகழ்வுப்பணி நீதிமன்றத்தின் அனுமதியுடன் நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More