Home இலங்கை இன்றைய அரசு, தமிழர்களுக்கு தீர்வை வழங்கா விட்டாலும், நிம்மதியாக வாழும் நிலை உண்டு!

இன்றைய அரசு, தமிழர்களுக்கு தீர்வை வழங்கா விட்டாலும், நிம்மதியாக வாழும் நிலை உண்டு!

by admin

மகிந்த மீண்டும் வந்தால் தமிழர் நிலமை இன்னும் மோசமாகும்…

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமயிலான குழுவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் பேசும் மக்கள் தமக்கான தீர்வினை எதிர்பார்க்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கம் தன்னிடம் உள்ள குறைபாடுகளைத் திருத்திச் செல்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்காவிட்டால் அது ஆட்சிக்குப் பெரும் சரிவினை ஏற்படுத்தும் நிலை உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் பலவீனங்களை காட்டிக்கொண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற நினைப்போருக்கு அந்த சந்தர்ப்பத்தினை வழங்காமல் தமது பலவீனங்களை திருத்திக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கு இதுவரையில் தீர்வுகள் வழங்கப்படா விட்டாலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் நிலை காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ஷ குழுவினர் ஆட்சிக்கு வந்தால் தமிழ் பேசும் மக்கள் எந்தவொரு தீர்வுத் திட்டத்தினையும் எதிர்பார்க்க முடியாது என்பதுடன், நிலைமை மேலும் மோசமாகும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் வரும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் குரல்கொடுப்பது இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More