Home உலகம் ஜெர்மனியில் பேருந்து ஒன்றினுள் கத்திக்குத்து தாக்குதல் – 14 பேர் காயம்

ஜெர்மனியில் பேருந்து ஒன்றினுள் கத்திக்குத்து தாக்குதல் – 14 பேர் காயம்

by admin


ஜெர்மனியில் பேருந்து ஒன்றினுள் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர். வடக்கு ஜெர்மனியில் உள்ள லூயிபெக்(Luebeck)  நகரில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர் தனது ஆசனத்தினை மூதாட்டி ஒருவருக்கு விட்டுக்கொடுத்த போது ஆசனத்தினை வழங்கிய நபரின் மார்பில் திடீர் என கத்தியால் குத்தியுள்ள நபர் ஒருவர் அதனையடுத்து அருகே இருந்த பலரையும் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளநிலையில் தாக்குதலை மேற்கொண்ட 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Firefighters attend passengers of a bus in Luebeck, northern Germany, Friday, July 20, 2018 after a man attacked people inside. (TNN/dpa via AP)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More