Home இலங்கை தமிழ் தின நாடகப்போட்டியில் மன்னார் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை முதலாம் இடம்

தமிழ் தின நாடகப்போட்டியில் மன்னார் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை முதலாம் இடம்

by admin


அகில இலங்கை தமிழ் தின நாடகப்போட்டியில் தேசிய ரீதியில் மன்னார் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை முதலாம் இடத்தைப்பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கொழும்பில் கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை நடை பெற்ற நாடகப்போட்டியில், வடமாகாணத்தில் இருந்து மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை ஏனைய 08 மாகாணங்களுடன் போட்டியிட்டு இச்சாதனையினை நிலை நாட்டியுளது.

‘சமூக விழிப்புணர்வு’ நாடகத்தில் மன்னார் மாவட்டமும் வடமாகாணமும் தேசிய ரீதியில் முதலாமிடத்தினை பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். 2018 நடந்த தமிழ் தினப்போட்டியில் மன்னார் வலைய மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் சமூக நாடகத்தில் முதலாம் இடத்தினை பெற்ற மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை பெற்றிருந்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More