Home இலங்கை எமது போராட்டம் முடியவில்லை , வடிவம் மாற்றப்பட்டுள்ளது -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்( வீடியோ)

எமது போராட்டம் முடியவில்லை , வடிவம் மாற்றப்பட்டுள்ளது -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்( வீடியோ)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

எமது போராட்டம் முடியவில்லை எனவும் எமது உறவுகளுக்கு முடிவு கிடைத்த பின்னரே எமது போராட்டம் முடியும் எனவும் எமது போராட்ட வடிவமே மாற்றப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த வருடம் பங்குனி மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது கடந்த 18 ம் திகதி 500 ஆவது நாளில் அந்த இடத்தில் முடிவுறுத்தப்பட்டது

ஆனால் அது எமது போராட்ட முடிவல்ல அந்த இடத்தில் எமக்கு பாரிய சிக்கல்கள் இருந்தது எனவே அந்த இடத்தில் எமது போராட்டத்தை நிறுத்தி மாற்றுவழியில் போராட முடிவெடுத்தோம். அதன்விளைவாக எமக்கான அலுவலகம் ஒன்றை அமைத்து அதில் இருந்து போராடுகிறோம்

எமது போராட்டம் எமது உறவுகள் கிடைத்தாலே அன்றி நிறுத்தப்படாது காலத்துக்கு காலம் வடிவங்களை மாற்றி போராடிக்கொண்டே இருப்போம் என உறவுகள் தெரிவிக்கின்றனர். இன்று காலை பத்துமணியளவில் மாங்குளம் வீதியில் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் தமக்கான அலுவலகத்தை திறந்து போராட்டத்தை தொடரும் உறவுகள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More