Home இலங்கை வாகரையில் 500 ஏக்கரை கைப்பற்றும் முயற்சி – அபிவிருத்திக் குழு கூட்டத்தில் விவாதிப்பு

வாகரையில் 500 ஏக்கரை கைப்பற்றும் முயற்சி – அபிவிருத்திக் குழு கூட்டத்தில் விவாதிப்பு

by admin

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் இலங்கை கடற்படை இராணுவ முகாம் அமைக்க 500 ஏக்கர் காணி கோரப்பட்டுள்ளதாக அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் வாகரை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனால் மீண்டும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிருமிச்சை சந்தி என்னும் பகுதியில் கடற்படைக்கு வழங்கப்பட்ட 540 ஏக்கருக்கு முன்னால் உள்ள மரமுந்திரிகை திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட காணியையே முகாம் அமைப்பதற்காக ராணுவத்தினர் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திடம் கோரி உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கு இங்கு காணி வழங்க முடியாது என தெரிவித்த சீ. யோகேஸ்வரன் ஏற்கனவே பல நூற்றுக் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ளதாகவும் இவ்விடயமாக மாவட்ட அபிவிருத்திக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இ ஆராய்வதற்கு இணைத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More