Home இலங்கை விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 3 மணித்தியாலம் விசாரணை

விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் 3 மணித்தியாலம் விசாரணை

by admin


முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டுமென அவர் உரையாற்றியமை தொடர்பிலேயே இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரையான 3 மணித்தியாலங்கள் விசாரணை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்போது, தான் ஐக்கிய தேசியக் கட்சியின் எழுச்சிக்காகவேயன்றி விடுதலைப் புலிகள் அமைப்பின் மீளெழுச்சிக்காக உரையாற்றவில்லை எனத் தெரிவித்துள்ள விஜயகலா மகேஸ்வரன் குறித்த உரை கடுமையானதொன்று என்பதனை உரையின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களின் போது உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar July 25, 2018 - 8:17 pm

Ha ha nice twist Ya though our public were fools those who ever elected this lady as a parliamentarian as well appointed as a Minister as well. Hmmmm.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More