Home இலங்கை “ஜனாதிபதியானதும், மாகாணத்திற்கு காணி காவல்துறை அதிகாரங்கள் தரமாட்டேன், அது ஆபத்தானது”! 

“ஜனாதிபதியானதும், மாகாணத்திற்கு காணி காவல்துறை அதிகாரங்கள் தரமாட்டேன், அது ஆபத்தானது”! 

by admin

குளோபல் தமிழ் செய்தியாளர்…

மாகாண அரசுக்கு காணி காவல்துறை  அதிகாரங்களை வழங்கககூடாது என்றும் அது பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்றும்  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த அணி சார்பில் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த கோத்தபாய நேற்று தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து உரையாடி இருந்தார். இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்றிருந்தது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு காணப்போவதாகவும் பொருளாதார பிரச்சினை காரணமாகவே முப்பதாண்டு ஆயுதப் போராட்டம் நடந்தாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டுக்கடன் பெற்றதாக தம்மீது குற்றம் சுமத்தப்படுகின்றதாகவும் வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யவே வெளிநாட்டுக்கடன் பெற்றாகவும் அவர் கூறினார்.

மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை   அதிகாரங்களை வழங்கினால் முதலமைச்சர் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவார் என்றும் கொழும்பு அரசினால் பின்னர் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் கோத்தபாய குறிப்பிட்டார். வடக்கு முதலமைச்சர் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் இலங்கையில் சிங்கள இராணுவம் இல்லை என்றும் தேசிய இராணுவமே காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக ஈபிடிபி மற்றும் புளொட்டின் ஆயுதங்கள் களையப்பட்டதாக அவர் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு இராஜபக்சகளுக்கு எதிராகவே தயாரிக்கப்படுவதாகவும் இரட்டை குடியுரிமை உடையவர்களை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கப்படுவதாகவும் கூறிய அவர் புதிய அரசியலமைப்பு பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்தாத வகையில் தயாரிக்கப்படுவதாகவும் மேலும் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More