Home இந்தியா பக்கவிளைவுகளை பற்றி அறியாமல், பக்தியுடன் கங்கை நீரை அள்ளிப்பருகும் பக்தர்களை எச்சரிக்கவும் :

பக்கவிளைவுகளை பற்றி அறியாமல், பக்தியுடன் கங்கை நீரை அள்ளிப்பருகும் பக்தர்களை எச்சரிக்கவும் :

by admin


கங்கை ஆற்றில் குவிந்துள்ள மாசுக்கள் குறித்து விசாரித்துவரும் தேசிய பசுமை தீர்ப்பாயம் குளிக்கவும், குடிக்கவும் கங்கை நீர் தகுதியற்றுப் போயுள்ளதாக எச்சரிக்கை விடுமாறு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் வற்றாத ஜீவநதியாகவும், புனித நதியாகவும் கருதப்படும் கங்கை ஆற்றின் புனிதம் குலைந்து, குப்பை கூளங்களும் மாசுக்களும் நிறைந்திருக்கும் நிலையை போக்குவது தொடர்பாக விரைந்து முடிவெடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பசுமை பாதுகாவலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இதனை மாற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின்போது ஹரித்வாரில் இருந்து உன்னாவ் வரையிலான இடைவெளியில் ஓடும் கங்கை நீர் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ தகுதியற்ற நிலையில் இருப்பதாக பசுமை தீர்ப்பாயம் வேதனை தெரிவித்துள்ளது.

தங்களது உடல்நிலையில் பின்னாளில் ஏற்படக்கூடிய பல்வேறு பக்கவிளைவுகளை பற்றி அறியாமல் இவ்வளவு அசுத்தமான நீரை பக்தியுடன் அள்ளிப்பருகும் பக்தர்கள் மற்றும் இதில் குளிப்பவர்களின் நிலையைப்பற்றி நாம் எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

சிகரெட் புகைப்பது உடல்நலத்துக்கு தீங்கானது என்று சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ள எச்சரிக்கையைப்போல், மாசாகிப்போன கங்கை நீருக்கும் இப்படியொரு எச்சரிக்கையை ஏன் வெளியிட கூடாது எனவும் பசுமை தீர்ப்பாயம் வினா எழுப்பியுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More