Home இலங்கை பளை பிரதேசத்தில் கட்டுமீறி இடம்பெறுகிறது சட்டவிரோத மணல் அகழ்வு…

பளை பிரதேசத்தில் கட்டுமீறி இடம்பெறுகிறது சட்டவிரோத மணல் அகழ்வு…

by admin

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது என பொது மக்களும் பொது அமைப்புக்ளும், பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

நாளுக்கு நாள் சட்டவிரோத மணல் அகழ்வு பாரியளவில் இடம்பெற்று வருகிறது என்றும், உள்ளுர் நபர்களும், வெளியிடத்தவர்களும் இணைந்தே சட்டவிரோதமாக மணல் அகழ்வுக்கு அனுமதிக்கப்படாத இடங்களில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பளை பிரதேசத்தின் கிளாலி, அல்லிப்பளை, தர்மக்கேணி, மாசார், சோரன்பற்று, புலோப்பளை, இயக்கச்சி, போன்ற பிரதேசங்களில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

பளை பிரதேசத்தில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறு பிரதேசங்கள் கடற்கரைக்கு அருகில் இருப்பதனால் கடல் நீர் உட்புகும் அபாயம் இருப்பதாகவும், பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலீஸாருக்கு அறிவிப்பத்தில் எவ்வித பயனும் இல்லை எனத் தெரிவித்த மக்கள் தாங்கள் இரணைமடுவில் அமைந்துள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய சிரேஸ்ட பொலீஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு அறிவித்தால் மட்டுமே அங்கிருந்து வரும விசேட அதிரடிப்படையினர் சட்டவிரோத மணல் அகழ்வினை மேற்கொள்பவர்களை கைது செய்துகொண்டு செல்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.

எனவே மிகமோசமாக இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்த சம்மந்தப்பட்ட அனைவரும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More