Home இந்தியா லோக்பாலை அமைக்கக் கோரி அண்ணா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு

லோக்பாலை அமைக்கக் கோரி அண்ணா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு

by admin

லோக்பாலை அமைக்கக் கோரி எதிர்வரும் ஒக்டோபர் 2-ம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

லோக்போல் மசோதாவை நிறைவேற்றக் கோரி கடந்த 2011 ஏப்ரலில் அண்ணா ஹசாரே டெல்லியில் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இந்தியா முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்ட போதும் இதுவரை லோக்பால் அமைப்பு உருவாக்கப்படவில்லை.

இந்தநிலையில் ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் அமைப்பு இன்னமும் உருவாக்கப்படவில்லை. அதற்கு மத்திய அரசு பல்வேறு காரணங்களைக் கூறுகிறது . ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.
எனவே லோக்பால் அமைப்பை நியமிக்கக் கோரி மகாத்மா காந்தி பிறந்த நாளான ஒக்டோபர் 2-ம் திகதிமுதல் தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பிக்க உள்ளதாகவும் அதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More