Home இலங்கை வங்காலை கடலில் படகில் தொழிலுக்குச் சென்றவர் கடலில் வீழ்ந்து பலி ( வீடியோ )

வங்காலை கடலில் படகில் தொழிலுக்குச் சென்றவர் கடலில் வீழ்ந்து பலி ( வீடியோ )

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் வங்காலை கிராமத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை(30) அதிகாலை படகு ஒன்றில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் தொழிலுக்குச் சென்ற நிலையில் தந்தை கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வங்காலை இரத்தினபுரி கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சிலுவைதாசன் றொனி மிராண்டா (வயது-44) என தெரியவந்துள்ளது.

கடும் காற்றும் கடல் கொந்தளிப்புமாக காணப்பட்ட நிலையில் அவர்கள் தொழிலுக்குச் சென்று மன்னார் வங்காலை தென் கடல் பகுதியில் இவர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது கடலில் ஏற்பட்ட அதிவேகம் கொண்ட அலையின் காரணமாக படகில் இருந்து தந்தை கடலினுள் தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் கடும் காற்று காரணமாக தந்தையை மீட்க மகன் முயற்சி செய்த போதும் முடியாமல் போயுள்ளதுஃ

இதனையடுத்து மகன் படகில் கடற்கரைக்கு வந்து சக மீனவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் தந்தை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More