Home இலங்கை தொல்புரத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த வேளையில் பணம் நகை கொள்ளை(படங்கள்)

தொல்புரத்தில் வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த வேளையில் பணம் நகை கொள்ளை(படங்கள்)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டுக்குள் புகுந்த திருட்டுக் கும்பல் 31 பவுண் தங்க நகைகளையும் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றது என வட்டுக்கோட்டைக் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொல்புரம், பிளவத்தைப் பகுதியிலுள்ள வீட்டிலேயே இன்று காலை 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் இந்தத் திருட்டு இடம்பெற்றது. கூட்டுக் குடும்பமாக 3 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தில் ஒருவர் சந்தைக்குச் சென்றுள்ளார். ஏனையோர் வேலைக்குச் சென்றுவிட்டனர்.

வீட்டில் எவரும் இல்லாதவேளை பார்த்து அங்கு புகுந்த கும்பல் ஒன்று 31 பவுண் தங்க நகைகளையும் 2 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளது. சந்தைச் சென்றவர் வீடு திரும்பி வந்து பார்த்த போதே வீடுடைத்து திருட்டுப் போனமை தெரியவந்தது.

உடனடியாக வட்டுக்கோட்டைக் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இதேவேளை, தொல்புரம் பகுதியில் இன்று காலை சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடியோர் அப்பகுதி இளைஞர்களால் துரத்தப்பட்ட வேளை தப்பியேடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More