Home இலங்கை அலரி விதையை உண்டால் என்ன நடக்கும்? பரிசோதித்தவருக்கு விடை மரணம்….

அலரி விதையை உண்டால் என்ன நடக்கும்? பரிசோதித்தவருக்கு விடை மரணம்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

அலரி விதையை உண்டால் என்ன நடக்கும் என பரிசோதித்த குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். வலிகாமம் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுகிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற குடும்பஸ்தர், மீண்டும் வீடு திரும்பியதும் வாந்தி எடுத்துள்ளார். அத்துடன் மிகுந்த சேர்வு நிலையிலும் இருந்துள்ளார். அது குறித்து அவரது மனைவி விசாரித்த போது, வரும் வழியில் அரலி விதையை உண்டதாகவும் , அதனை சாப்பிட்டால் என்ன நடக்கும் என அறிவதற்காகவே அதனை சாப்பிட்டதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார்.

அதனை அடுத்து அவரது மனைவி அவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார். குறித்த இறப்பு தொடர்பிலான மரண விசாரணைகளை யாழ்.போதனா வைத்திய சாலை திடீர் ,மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் மேற்கொண்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More