Home இலங்கை ஜனாதிபதி செயலணி விக்கியை புறக்கணிக்கவில்லை, அவரே கூட்டத்தை புறக்கணித்தார்…..

ஜனாதிபதி செயலணி விக்கியை புறக்கணிக்கவில்லை, அவரே கூட்டத்தை புறக்கணித்தார்…..

by admin


வடக்கு, கிழக்கு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விசேட ஜனாதிபதி செயலணியுடனான சந்திப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. இந்த செயலணி என்ன செய்யப் போகின்றது என்பது குறித்தும் கூட்டமைப்பிற்கு ஒன்றுமே தெரியாது. அந்த வகையில்  ஜனாதிபதி செயலணி எவ்வாறானது. அதன் வேலைத்திட்டங்கள் குறித்து கூட்டமைப்பு எந்தக் கருத்தையும் முன்வைக்க முடியாது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப் பதற்கான விசேட ஜனாதிபதி செயலணிக் கூட்டம் நேற்று முன்தினம் (30.07.18) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் கலந்து கொண்டனர். எனினும் இந்தக் கூட்டத்தில் வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் இந்த செயலணி திட்டங்கள் குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு கொள்ளாமை குறித்தும் கருத்து தெரிவித்த  அவர், வடக்கு கிழக்கு அபிவிருத்திகள் குறித்து கூட்டமைப்பு தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் கடந்த காலங்களில் இருந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் எதிர்க்கட்சி தலைவர் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளார் என சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்,  வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து பேச்சுவார்த்தைகளை கூட்டமைப்பு தொடர்ச்சியாக  முன்னெடுத்துள்ளது. இந்திய வீட்டுத்திட்டம் குறித்தும், அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் ஜனாதி­பதி விசேட செயலணி என்ன செய்யப்போகின்றது என்பது கூட்டமைப்பிற்கு  தெரியாது.

வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என ஊடகங்களில் அறிய முடிந்தது. வடக்குக் கிழக்கு பிரதிநிதிகளை புறக்ணிப்பதால் தான் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார். ஆனால் ஜனாதிபதி செயலணி விக்கினேஸ்வரனை புறக்கணிக்கவில்லை. அவர் தான் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். ஆகவே இதில் ஜனாதிபதி செயலணி பக்கம் தவறுகள் இருப்பதாக தெரியவில்லை. வடக்கு மாகாண முதல்வர் என்ற ரீதியில் அவர் கூட்டத்தில்  கலந்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More