Home இந்தியா வேதாரண்யம் அருகே மருதங்கேணி சக்த்திவேல் கைது – யாழ்ப்பாணம் சுகுமார் தப்பி ஓட்டம்….

வேதாரண்யம் அருகே மருதங்கேணி சக்த்திவேல் கைது – யாழ்ப்பாணம் சுகுமார் தப்பி ஓட்டம்….

by admin

இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 192 கிலோ கஞ்சா பறிமுதல்…

வேதாரண்யம் அருகே இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 192 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேரை காவற்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து கடல் வழியாக கஞ்சா மற்றும் தங்கம் அடிக்கடி கடத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேதாரண்யத்தை அடுத்த பெரிய குத்தகையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கடலோர காவல்படைக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவற்துறையினர் கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகு மூலம், 6 மூட்டைகளில் 192 கிலோ கஞ்சா கடத்த தயாராக இருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட 30 வயதுடைய ரமேஷ்குமார், யாழ்பாணம், மருதங்கேணியை சேர்ந்த 43 வயதுடைய சக்திவேல் ஆகிய இருவரை காவற்துறையினர் கைது செய்தனர். மேலும் பெரிய குத்தகையை சேர்ந்த முனீஸ்வரன், யாழ்பாணத்தை சேர்ந்த சுகுகுமார் ஆகியோர் காரில் தப்பி சென்று ள்ளனர். அவர்களை காவற்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் காவற்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More