Home இலங்கை மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் (படங்கள் )

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் (படங்கள் )

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் நகரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கூட்டுறவு திணைக்களத்தின் காணியை உடனடியாக இராணுவம் கூட்டுறவு திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை(6) மதியம் 1.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஏற்பாட்டில் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிஸாட் பதியுதீன் , பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஆகியோரின் இணைத்தலைமையில் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்றது.

-இதன் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் நகரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கூட்டுறவு திணைக்களத்தின் காணி இராணுவத்தின் வசம் இருக்கின்றது. எனவே குறித்த காணியை உடனடியாக மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் நடவடிக்கைக்காக விடுவிக்கப்பட வேண்டும்.என தெரிவித்தார்.

குறித்த கூட்டத்திற்கு இராணுவ அதிகாரி வருகை தராத நிலையில் இவ்விடயம் தொடர்பில் காவல்துறை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லபப்ட்டது. மேலும் மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி, சுகாதாரம், போக்குவரத்து, குடி நீர்,விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

ஆத்துடன் ; அடையாளம் காணப்பட்ட குளங்கள் புனரமைப்பு, மீன்பிடி மணல் தீடைகளுக்கான எல்லைக்கட்டுப்பாடு, வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் காணிகள் எல்லையிடுதல், முள்ளிக்குளம் காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பி வீட்டுத்திட்டம் கிடைக்காத அனைத்து மக்களுக்கும் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

-மேலும் மான்னார் மாவட்டத்தில் உள்ளக குடி நீர் வசதியை பெற்றுக்கொள்ளாத கிராம மக்களுக்கும் குறித்த வசதிகளை உடன் எற்படுத்திக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மக்களின் காணிகளில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லைகள் போடப்பட்டுள்ளமை குறித்தும், அதிகளவான எல்லைகளை அகற்றுவதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More