Home இலங்கை வாள் வெட்டு சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர்…

வாள் வெட்டு சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

(பரீட்சைக்கான ஆவண படம் மட்டுமே – File photo)

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள மூன்று சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர். தென்மராட்சி பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை, வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என மானிப்பாய் காவற்துறையினர்   கடந்த 04ஆம் திகதி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களின் மூவர் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ளனர் என நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில் அவர்கள் மூவரும் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் பரீட்சை எழுதுவதற்கு மன்று அனுமதி அளித்திருந்தது. அந்நிலையில் குறித்த மூன்று மாணவர்களும் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் பரீட்சையில் தோற்றி வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More