Home இலங்கை நீதியரசர் விக்கிக்கு அழைப்பாணை அனுப்பியது நீதிமன்றம்….

நீதியரசர் விக்கிக்கு அழைப்பாணை அனுப்பியது நீதிமன்றம்….

by admin


வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை செப்டெம்பர் 7 ஆம் திகதி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலைமைச்சருடன் அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவனேசன் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக நீதிமன்றத்தை அவமதித்ததித்தாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்ததன் பின்னர், குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக பி.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தன்னை குறித்த பதவியில் மீள அமர்த்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த உத்தரவை வட மாகாண முதலமைச்சர் செயற்படுத்தாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாகவும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar August 8, 2018 - 7:37 pm

Nice legal battle. Wow.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More