Home உலகம் 9 வயது இந்திய செஸ் சம்பியன் பிரித்தானிய விசா விளையாட்டிலும் சம்பியன் ஆனார்…

9 வயது இந்திய செஸ் சம்பியன் பிரித்தானிய விசா விளையாட்டிலும் சம்பியன் ஆனார்…

by admin

சிறுவர்களுக்கான செஸ் விளையாட்டுப் போட்டிகளில் உலக அளவில் நான்காம் இடத்தில் உள்ள இந்திய சிறுவன் ஷிரேயாஸ் ராயல் என்பவருக்கு விசா நீட்டிப்பு அளிக்க பிரித்தானியா இணக்கம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பெங்களூரு நகரை சேர்ந்த ஜித்தேந்திரா சிங், இந்தியாவின் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரிட்டன் நாட்டு கென்சிங்டன் நகர் கிளையில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த ஆறாண்டுகளாக பணியாற்றுகிறார். அவரது குடும்பமும் பிரித்தானியாவிலேயே அவருடன் தங்கியிருக்கிறது.


அவரது மகன் ஷிரேயாஸ் ராயல் செஸ் விளையாட்டை கற்றுதேர்ந்து, உலக அளவில் பல சர்வதேச போட்டிகளில் பிரி்தானியாவின் சார்பில் விளையாடி சிறப்பு சேர்த்து வந்துள்ளார். . அடுத்தகட்டமாக பிரித்தானியாவில் மேற்பிரிவில் மோதும் தேசிய அளவிலான செஸ் போட்டிகளுக்கு ஷிரேயாஸ் ராயல் தயாராகி வருகிறார்.
இந்நிலையில், அவரது தந்தை பணியாற்றும் நிறுவனத்தின் மூலம் ஷிரேயாஸ் ராயல் குடும்பத்தினர் பிரிட்டனில் தங்கியிருக்க அளிக்கப்பட்ட விசா அடுத்த மாதம் காலாவதியாக உள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பவுண்ஸ் வருமானம் பெற்றால் மட்டும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஜித்தேந்திரா சிங்குக்கு விசா நீட்டிப்பு செய்யப்படும் என்பது பிரித்தானியாவின் குடியுரிமை சட்டமாகும். இந்த காரணத்தால் அவரது குடும்பம் பிரிட்டனில் இருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.


பிரித்தானியாவுக்காக பல போட்டிகளில் விளையாடி பெருமை தேடிதந்த ஷிரேயாஸ் ராயலை இந்த நாட்டின் சொத்தாக கருதி இங்கு தொடர்ந்து வாழ அவருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஜித்தேந்திரா சிங் பிரிட்டன் குடியுரிமைத்துறை அலுவலகத்தில் மனு செய்தார். அவரது வேண்டுகோளை பிரி்தானியாவின் தேசிய செஸ் விளையாட்டு சம்மேளனமும் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தனர்.

இந்நிலையில், வெளிநாட்டினருக்கான பொது குடியுரிமை (Tier 2) முறைப்படி நீங்கள் விண்ணப்பித்தால் உங்களது விண்ணப்பத்தை சுலபமான முறையில் பரிசீலித்து விசா நீட்டிப்பு செய்ய தங்கள் அலுவலகம் தயாராக உள்ளது என ஜித்தேந்திரா சிங்குக்கு குடியுரிமைத்துறை தகவல் அனுப்பியுள்ளது. இதனால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ள ஷிரேயா ராயல் மற்றும் அவரது பெற்றோர் இந்த விவகாரத்தில் தமக்கு துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்…

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More