Home சினிமா சேட்டை நிறைந்த மாரி! மாரி 2 பட இயக்குனர் பாலாஜி மோகன்…

சேட்டை நிறைந்த மாரி! மாரி 2 பட இயக்குனர் பாலாஜி மோகன்…

by admin

தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ‘மாரி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தத் திரைப்படத்தை பாலாஜி மோகன் இயக்குகின்றார்.

இயக்குனர் ஆடுகளம் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடித்த `வடசென்னை’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளிவருகின்றது. இந்த நிலையில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த ‘மாரி 2’ படப்பிடிப்புநிறைவடைந்துள்ளதாக நடிகர் தனுஷ் தனது ருவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இறுதியாக பிரபுதேவா நடனம் அமைத்த பாடல் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கியது. அதனைத் தொடர்ந்து சில முக்கிய காட்சிகளுடன் படப்பிடிப்பு நிறைவுக்கு வந்தது.

மீண்டும் மாரியாக நடித்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இத் திரைப்படத்தில் தான் ஜாலியாக விரும்பி நடிக்கும் கதாபாத்திரம் இதுவென நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

மாரி-2 படப்பிடிப்பு நிறைவுபெற்றதாகவும் சேட்டை நிறைந்த மாரி கதாபாத்திரத்தை தனுஷை வைத்து மீண்டும் திரைக்கு கொண்டு வருவதே சிறப்பானது என்றும் இந்தப் படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் தனுஷின் நாயகியாக சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் நடித்துள்ளனர். வில்லன் கதாபாத்திரத்தில் டோவினோ தோமஸ் நடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More