Home இலங்கை கிளிநொச்சி புகயிரதக்கடவையும் கடந்து செல்வோரின் பீதியும்…

கிளிநொச்சி புகயிரதக்கடவையும் கடந்து செல்வோரின் பீதியும்…

by admin


கிளிநொச்சி 155 ஆம் கட்டை பாரதிபுரத்திற்கு செல்லும் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் புகயிரதக்கடவை சமிக்ஞை சீராக இயங்குவதில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

விவேகானந்த நகர், பாரதிபுரம், கிருஸ்ணபுரம். மலையாலபுரம். விநாயகபுரம், அம்பாள்குளம் பேன்ற கிராமங்களுக்கு செல்லும் மக்கள் இவ் வீதியினை பயன்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் குறித்த புகயிரதகடவை சீராக இயங்குவதில்லை எனவும், எழுப்பப்படும் ஒலியானது சரியாக கேட்ப்பதில்லை எனவும் கடவையை புகயிரதம் அண்மிக்கும் போதே சமிஞ்சை விழக்குகள் ஒளிர்வதனால் விபத்துக்கள் ஏற்ப்படுகின்றன எனவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புகையிரதங்கள் கடவையை கடக்காத நேரங்களிலும் இப் புகையிரத சமிக்கை தொடர்ந்தும் சிவப்பு நிற சமிக்கை காட்டிய வாறு உள்ளது எனவும் இதனால் கடவையை கடக்க முற்படுவோர் கடுமையான உழைச்சல்களுக்கு உள்ளவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு இந்த புகையிரத கடவையில் ஊழியர் எவரும் இல்லை என்பதுடன் இந்தக் கடவையில் புகையிரதத்தில் மோதுண்டு பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More