Home இலங்கை லண்டனில் இருந்து இலங்கை சென்ற பெண் சாவகச்சேரிக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்….

லண்டனில் இருந்து இலங்கை சென்ற பெண் சாவகச்சேரிக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்….

by admin

லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்ற பெண் ஒருவர் சாவகச்சேரி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். லண்டனில் இருந்து நாடு திரும்பிய 64 வயதான குறித்த பெண், அவருடைய உறவினர்களுடன் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து சாவகச்சேரி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More