Home இந்தியா மன நோய்க்கும் சிகிச்சை அளிக்கும் புதிய நடைமுறையை இந்திய காப்பீட்டுத் துறை அறிமுகம் செய்துள்ளது.

மன நோய்க்கும் சிகிச்சை அளிக்கும் புதிய நடைமுறையை இந்திய காப்பீட்டுத் துறை அறிமுகம் செய்துள்ளது.

by admin
Close up of model brain on mental health headlines


மருத்துவ காப்பீடு பெற்றுள்ள தனிநபர்களுக்கு இனி மனநோய்க்கும் சிகிச்சை அளிக்கும் புதிய நடைமுறையை இந்திய காப்பீட்டுத்துறை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு முகாமை வலியுறுத்தியுள்ளது. மனிதர்களை தாக்கும் நோய்களை விடவும் அதற்கு ஏற்படும் செலவுகள் குறித்த அச்சம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதனால் இந்த நிலையை மாற்ற அரசு சார்பிலும், வங்கிகள் சார்பிலும் காப்பீடு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த காப்பீடு திட்டங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் முகாமையான காப்பீட்டுத்துறை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு முகாமைத்துவம் அண்மையில் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், மனநோயாளிகளும் தங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை காப்பீடு மூலம் பெற முடியும் எனவும் இது மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விழிப்புணர்வையும், அவர்களை ஏற்கும் மனநிலையையும் அளிக்கும் என நம்புவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More