Home இலங்கை புலம்பெயர் தமிழர்களுக்கும், பிரபாகரனுக்கும் தேவையானதை செய்ய முடியாது….

புலம்பெயர் தமிழர்களுக்கும், பிரபாகரனுக்கும் தேவையானதை செய்ய முடியாது….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


பண்டையகால மன்னர்கள் செய்தது போல், சிங்களவர்களின் அபிமானத்தை தக்கவைத்துக்கொண்டு, சகல இனங்களும், மதங்களும் ஒன்றோடு ஒன்றாக கைகோர்த்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அவரது வீட்டில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன் காரணமாகவே பௌத்த மதம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள் என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறினார்.

புத்த பகவானின் போதனைகளின்படி நாம் எந்த மதத்திற்கும், இனத்திற்கும் எதிராக செயற்பட முடியாது. எனினும் புலம்பெயர் தமிழர்களுக்கும், பிரபாகரனுக்கும் தேவையானதை செய்ய முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக வாழும் மக்கள். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழும் மக்கள். ஆனால், நாட்டின் உரிமை சிங்களவர்களுக்கே இருக்கின்றது அதனை எவராலும் இல்லாமல் செய்ய முடியாது.

சந்திரிக்கா அம்மையாரின் நல்லிணக்கம் என்பது என்ன, அவர்கள் வெளிநாடுகளில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களிடம் பணத்தை பெறுகின்றனர். அந்த பணம் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்படுகிறது. அதில் வாழ்கின்றனர். அப்படியான நல்லிணக்கம் எமக்கு எதற்கு. நல்லிணக்கத்தை கோர வேண்டியது அவர்கள், நாங்கள் அல்ல. நல்லிணக்கத்தை கோரி அவர்களிடம் சென்று ஏன் மண்டியிட வேண்டும். நல்லிணக்கம் என்பது என்றும் இருந்தது எப்போதும் இருக்கின்றது. இலங்கையில் எவரும் எங்கும் வாழ முடியும். சிங்களவர்களுக்கே வாழ முடியாது போயுள்ளது எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More