Home இலங்கை புனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 30பேருக்கு பட்டதாரி நியமனம்…

புனர் வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 30பேருக்கு பட்டதாரி நியமனம்…

by admin

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 30பேருக்கு பட்டதாரி நியமனம்வழங்கப்பட்டமை மிகுந்த மகிழ்சிஅளிப்பதாக வடமாகாண ஆளுநர்றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கானஅரச நியமனங்கள் அலரிமாளிகையில்நேற்று (20) கௌரவ பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில்தனது மகிழ்சியை தெரிவித்து அவர்அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

புலிகள் அமைப்பிலிருந்து இறுதி யுத்தத்தில்சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வின்பின்னர் தமது உறவினர்களுடன் இணைந்துகொண்டனர். அவர்களில் பட்டதாரிகளாககாணப்பட்ட பலர் கடந்த 2017 ஆரம்பத்தில்சுண்டுக்குளியில் அமைந்துள்ள எனதுஅலுவலகத்தில் என்னை சந்தித்து ஒருகோரிக்கையினை முன்வைத்திருந்தனர். அதாவது பட்டதாரிகளுக்கான அரச பணிநியமனங்களில் தமது பெயர்களும்உள்வாங்கப்படவேண்டும் என்பதாகும்.

அதற்கு அமைய கடந்த 2017.07.26 அன்றுகௌரவ அமைச்சர் சுவாமிநாதன்அவர்களுக்கு நான் எழுத்து மூலம்முன்வைத்த ஆலோசனையினை ஏற்றுகௌரவ அமைச்சர் அமைச்சரவைபத்திரத்தினை முன்வைத்து நிறைவேற்றிஇப்போராளிகளுக்கும் நேற்று (20.08.2018) அரச பணி நியமனத்தினைவழங்கியிருக்கின்றார். அவருக்கும் எனதுமனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஏற்கனவே கடந்த வருடம் 35 புனர்வாழ்வுபெற்ற போராளிகள் பட்டதாரிகள்நியமனத்தில் உள்வாங்கப்பட்டு அரசபணிக்கு அமர்த்தப்பட்டார்கள். மேலும்இரண்டாம் கட்டமாக நேற்றயதினம் 30புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அரசபணிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.

சமாதானத்திற்கு இது ஒருமுன்னேற்றகரமான சம்பவமாகஅமைக்கின்றது. இதுபோன்று மேலும்பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசசேவைகள் கிடைக்க எனது முழுஒத்துழைப்பினையும் வழங்கவுள்ளதாகதெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More