Home இலங்கை சுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலை- சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு….

சுழிபுரம் சிறுமி ரெஜினாவின் கொலை- சாட்சியாளர்களை முன்னிலைப்படுத்த உத்தரவு….

by admin

யாழ். சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும்,   இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த  வழக்கு விசாரணையானது இன்று (21.08.18) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கின் இரண்டாம் சாட்சியமான 10 வயது சிறுமியையும், 7 வயது சிறுவனையும் நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், வட்டுக்கோட்டை காவல்  நிலைய பொறுப்பதிகாரியையும் விசாரணை அதிகாரிகளையும் எதிர்வரும் 31ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்ட  நீதவான், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும்  உத்தரவிட்டுள்ளார்.

யாழ். சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் 6 வயதான சிவனேஸ்வரன் ரெஜினா கொலை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More