Home இலங்கை மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது…

மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது…

by admin

மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது. அடிக்கல்லினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீன்பிடித்துறை அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா .பிரதி அமைச்சர் . பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் . நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே ஆகியோரால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது இதற்கமைய, முதற்கட்டத்தில் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், கடலை ஆழப்படுத்தல், அலைதடுப்பு நிலையம், குளிரூட்டல் அறைகள் உட்பட்ட அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நிர்வாகக் கட்டிடம், மீன்பிடி வலைகள் பின்னும் நிலையம், நீர்த்தாங்கிகள், கழிவறைகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டில் 245 மில்லியன் ரூபாவில், அலைதடுப்பு கட்டுமானத்தின் முழுமையான புனரமைப்பு, ஏலமிடும் நிலையம், துறைமுக நுழைவாயில் கடலை மேலும் ஆழப்படுத்தல் முதலான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிகழ்வில் நினைவுப் பலகையை திறந்துவைத்து மயிலிட்டி மீன் துறைமுகத்தின் புனரமைப்பு பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

படங்கள் மற்றும் செய்தி :- செ.நிரூஜன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More