Home இந்தியா நல்லெண்ண அடிப்படையில் வெளிநாடுகள் வழங்கும் நிதியை பெறலாம் :

நல்லெண்ண அடிப்படையில் வெளிநாடுகள் வழங்கும் நிதியை பெறலாம் :

by admin


இயற்கை பேரிடரின்போது நல்லெண்ண அடிப்படையில் தாமாக முன் வந்து வெளிநாடுகள் வழங்கும் நிதி உதவியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக ஆவணம் தெரிவித்துள்ளது.  மழையால் பெரும் பாதிப்புக்குள்ளான கேரள மாநிலத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம், கட்டார் உள்ளிட்ட வெளிநாடுகள் நிதி உதவி வழங்க முன்வந்துள்ள போதும் மத்திய அரசு அவற்றை ஏற்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் என்ற ஆவணம், இயற்கை பேரிடரின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்காக நல்லெண்ண அடிப்படையில் தாமாக முன் வந்து வெளிநாடுகள் நிதி உதவி அளித்தால் மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஐ.நா. சபையின் துணை அமைப்புகள் ஏதேனும் உதவிகள் செய்ய முன்வந்தால், அதை பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்து அவசியம் என்னும் நிலையில் மட்டுமே மத்திய அரசு ஏற்கும் எனவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், ஐ.நா. நிதி அமைப்புகள் அன்னியச்செலாவணியுடன் தொடர்புடைய நிதி உதவி அளிக்க முன்வந்தால், அதற்கு பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்தால் மட்டுமே பெற முடியும் என அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

எனினும் இயற்கை பேரிடரின்போது வெளிநாடுகளிடம் நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுப்பது இல்லை என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு எனவும் குறித்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More