Home இலங்கை பண்டார வன்னியன் முல்லையை கைப்பற்றிய நாளை, புலிகள் நினைவு நாளாக அறிவித்தனர்!

பண்டார வன்னியன் முல்லையை கைப்பற்றிய நாளை, புலிகள் நினைவு நாளாக அறிவித்தனர்!

by admin

 

வன்னியின் தலை சிறந்த மன்னனான பண்டார வன்னியன் முல்லைத்தீவு கோட்டையை வெற்றி கொண்ட நாள் இன்றாகும். இந்த வெற்றி நாளை நினைவு கூறும் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு கோட்டையை பண்டார வன்னியன் கைப்பற்றிய 215ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு பண்டார வன்னயனின் உருச் சிலைக்கு மலர்மாணி அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்றைய நாளை பண்டார வன்னியன் நினைவு நாளாக (1803 ஆகஸ்ட் 25) விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி இடம்பெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கியதுடன் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றினான். அந்த நாள்தான் 1803 ஆகஸ்ட் 25. எனவே, பண்டார வன்னியனின் உச்சபட்சமான போர் வெற்றியே அவரது நினைவு நாளாக இன்றைய நாள் நினைவு கூறப்படுகிறது.

பண்டார வன்னியன் கொலைசெய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதை வைத்தே, இறந்த நாள் (அக்டோபர் 31) என்று கணக்கிடுகிடப்படுகின்றது. எனினும் 1810 ஆம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், போரில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக அவர் 1811 ஆம் ஆண்டில் பனங்காமத்தில் இறந்திருப்பார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More