Home உலகம் தவறான தகவல்களில், பெரியதொரு பனிப்பாறையே உருவாக்கப்பட்டுள்ளது என சூகி கூறியது தவறு…

தவறான தகவல்களில், பெரியதொரு பனிப்பாறையே உருவாக்கப்பட்டுள்ளது என சூகி கூறியது தவறு…

by admin

மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது, கடந்த ஆண்டு ராணுவம் மேற்கொண்ட வன்முறைகளையடுத்து அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூகி பதவி விலகியிருக்க வேண்டும் என தனது பதவியை நிறைவு செய்யும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

ராணுவம் மீதான குற்றச்சாட்டை குறைக்க முற்பட்டதைவிட வீட்டுக்காவலுக்கு மீண்டும் திரும்புவதையே நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் மியன்மார் நாட்டின் ராணுவம் திட்டமிட்டு இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் மியன்மார் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் நீண்டகால தலைவரான ஆங் சான் சூகி இந்த வன்முறையை தடுக்க தவறிவிட்டார் என குற்றம் சுமத்தியுள்ளது.

மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் நீதிமன்ற வழக்கொன்றை சந்தித்து தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் ஏதாவது செய்யக்கூடிய நிலையில் அவர் இருந்தார் எனத் தெரிவித்த ஹூசைன் , அவர் அமைதியாக இருந்திருக்க வேண்டும். இன்னும் சொன்னால், அவர் பொறுப்பில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மியான்மர் ராணுவத்தின் சார்பாக பேச வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை எனவும் தவறான தகவல்களின் பெரியதொரு பனிப்பாறையே உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அனைத்தும் புனையப்பட்டவை என சூச்சி சொல்லியிருக்க வேண்டியதில்லை எனவும் ஹூசைன் கூறியுள்ளார்.மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது, கடந்த ஆண்டு ராணுவம் மேற்கொண்ட வன்முறைகளையடுத்து அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூகி பதவி விலகியிருக்க வேண்டும் என தனது பதவியை நிறைவு செய்யும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

ராணுவம் மீதான குற்றச்சாட்டை குறைக்க முற்பட்டதைவிட வீட்டுக்காவலுக்கு மீண்டும் திரும்புவதையே நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூச்சி தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பௌத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் மியன்மார் நாட்டின் ராணுவம் திட்டமிட்டு இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் மியன்மார் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் நீண்டகால தலைவரான ஆங் சான் சூகி இந்த வன்முறையை தடுக்க தவறிவிட்டார் என குற்றம் சுமத்தியுள்ளது.

மியான்மரில் ரோஹிஞ்சா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் நீதிமன்ற வழக்கொன்றை சந்தித்து தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இந்தநிலையில் ஏதாவது செய்யக்கூடிய நிலையில் அவர் இருந்தார் எனத் தெரிவித்த ஹூசைன் , அவர் அமைதியாக இருந்திருக்க வேண்டும். இன்னும் சொன்னால், அவர் பொறுப்பில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மியான்மர் ராணுவத்தின் சார்பாக பேச வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை எனவும் தவறான தகவல்களின் பெரியதொரு பனிப்பாறையே உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அனைத்தும் புனையப்பட்டவை என சூகி சொல்லியிருக்க வேண்டியதில்லை எனவும் ஹூசைன் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More