Home இலங்கை புத்தளம் – மங்கள எலிய பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி…

புத்தளம் – மங்கள எலிய பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி…

by admin


புத்தளம் – மங்கள எலிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போது இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (02.09.18) இரவு மங்கள எலிய, ஹேன்யாய பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில்,  சவிதுகம பகுதியை சேர்ந்த 37 வயதுடைய கீத் மங்கள பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஹேன்யாய பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரை முந்தலம் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து கல்கடஸ் ரக துப்பாக்கி ஒன்றும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த நபருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் நீண்ட காலமாக பிரச்சினை இருப்பதாகவும் அதன் பிரதிபலிப்பாகவே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் முந்தலம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More