Home இலங்கை சிறையில் அடைத்து எமது பயணத்தை நிறுத்த முடியாது

சிறையில் அடைத்து எமது பயணத்தை நிறுத்த முடியாது

by admin

எம்மையும் எம்மை சார்ந்தவர்களையும்  சிறையில் அடைப்பதினால் எமது பயணத்தை நிறுத்த முடியாது என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது விடயமாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

மக்களின் சட்டைப் பைகளை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த இந்த  அரசாங்கம் இன்று அவர்களின் சட்டைப்பைகளை நிரப்பி மக்களை நடு வீதியில் விட்டுள்ளது.இந்த அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் செப் 5 இந்த அரசுக்கு எதிராக எம்மோடு கைகோர்க்க உள்ளனர்.

இந்த அரசாங்கம் எம்மையும் எம்மை சார்ந்தவர்களையும் சிறையில் அடைத்தாவது இதனை தடுத்து நிறுத்த முயற்சித்து வருகிறது.பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக்கொண்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய இந்த நாட்டின் பிரதமரின் நண்பர் அர்ஜுன மஹேந்திரன் போன்றவர்களையும் அலோசியஸ் முதலாளியிடம் சொகுசு மாளிகைகளை பெற்ற முன்னாள் அமைச்சர்களையும் கண்டுகொள்ளாத இந்த அரசு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிமைக்காக இன்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை சிறையில் அடைத்துள்ளது.

நாளை மறுதினம் இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஆரம்பமாகும் மக்கள் போராட்டம்  மக்களின் நலனுக்கான ஒரு அரசாங்கத்தை உருவாக்கும் வரை ஓயாது என்பதை இந்த அரசாங்கத்திற்கு நாம் கூறுவைக்க விரும்புறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More